வியாழன், 25 பிப்ரவரி, 2021

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்

1.032.திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம்.

மூலவர்:
மகாலிங்கேசுவரர், மருதவனேசுவரர்,

தாயார்:
பிரகத் சுந்தரகுஜாம்பிகை, பெருநலமாமுலையம்மை

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

பாடல் எண் - 3

வெண்கோ வணங்கொண் டொரு வெண்டலையேந்தி
அங்கோல் வளையா ளையொர்பா கமமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோ னுறைகின் றவிடை மருதீதோ.

பொழிப்புரை

வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாயத் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று, பொங்கிவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ?

சுந்தா்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக