இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்
இருக்க முடியும்*
-சீன அதிபர் ஜி ஜிங்பிங்.
முன்னெல்லாம், இந்திய ஜனாதிபதியோ, பிரதமரோ அரசு முறை பயணமா சீனாவுக்கு போனா..., திருப்பதி கோவில் பெருமாள் தரிசனம் மாதிரி, "போனா போகட்டும்... அவ்ளோ தூரத்துலிருந்து வந்துட்டான்" னு பரிதாபப்பட்டு, பத்தே பத்து நிமிஷம் சீன அதிபர் தரிசனம் குடுப்பாரு
இருநாட்டு தலைவர்களோட...,
கூட்டு பொறியல் அறிக்கை எல்லாம் கிடையாது.
சங்கி மங்கின்னு எவனாவது, சீன வெளியுறவு செயலரோட ஒன்னுவிட்ட சின்னாத்தா மவன்தான், "இந்தியாவுடன் நட்புறவை விரும்புகிறோம்" ன்னு, சர்வதேச மீடியா வுக்காக... வழக்கமான ஒரு பேட்டிய குடுத்துட்டு, "அவிங்களுக்கு டீ-யக் குடுத்து பத்தி விடுங்கடா"னுட்டு போயிடுவான்.
நம்மாளுங்க, சீன கிரீன் டீ நாலு பாக்கெட் வாங்கி பேக்ல சொருவிட்டு, யுனான் மாகாண மேம்பாலத்துல சறுக்கி விளையாண்ட்டு, மஞ்சள் நதிக்கு குறுக்கால கட்டுன அணக்கட்டு மேல, பொண்டாட்டியோட நின்னு போட்டோ புடுச்சுட்டு ... ஊரு வந்து சேருவாங்க.
ஆனால் இன்று .....

இந்திய ராணுவம் டோக்லாம்ல 72 நாட்கள் பிடிவாதமா பட்டறை போட்டது.

அருணாச்சல் விமானப்படை சீரமைப்பு.

எல்லைல மிகப்பெரிய விமானப் படை போர் பயிற்சி.

திபெத்தை நோக்கி நிறுத்தப் பட்டிருக்கும்... நூறு T90 டாங்ஸ் & பிரம்மோஸ் மிஸைல்ஸ்.

சீனாவின் எதிரிகளான... வியட்நாம் & தைவானுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் விற்பனை.

சீன மிரட்டலுக்கு பயந்து மன்மோகன் ஆட்சியில் பின்வாங்கிய, வியட்நாம் எண்ணெய் துரப்பன பணியை மீண்டும் தொடங்கியது.

தென்சீன கடல் பகுதியில் இந்திய போர் கப்பல்களை நிறுத்தியது.

இந்தியாவை சுற்றி சீனா கோர்த்த, 'முத்து மாலை' திட்டத்தை அறுத்தெறிந்தது! சாபகார் போர்ட் நிறுவியது!

சீனாவுக்கு கொடுக்க இருந்த புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பானுக்கு மாற்றியது.

இந்திய சீன பிரச்சனையில், சித்தாந்த ரீதியில் சீனாவை ஆதரிக்கும் ரஷ்யாவை, பிரச்சனையில் இருந்து விலகி நிற்க வைத்தது.

எந்த காலத்திலும் இல்லாமல் இப்போது... அமெரிக்க, இந்திய, ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பு & கடற்படைகளின் கூட்டு போர் பயிற்சி. இதில் ஆஸ்திரேலியாவும் இணையப் போகிறது.

மிக முக்கியமாக, பாஸ்வேர்ட் போட்டு LOG IN கொடுத்த... அடுத்த இருபது நிமிடங்களில், சீனாவின் கிழக்கு எல்லைவரை நலம் விசாரிக்கும், 'அக்னி' குடும்பத்து ஏவுகணைகள்.

மோடி பாஸ்வேர்ட் போட்டு LOG IN கொடுக்க தயங்காத ஆள் என்பதும் சீனாவுக்கு தெரியும்.

உலக அரசியல் மாறிக் கொண்டிருப்பதையும், அது... இனி இந்தியாவை சுற்றியே சுழலும் என்பதையும் சீனா நன்றாக உணர்ந்து விட்டது.

மேலும் ஒரு முக்கிய தகவல், *சீன வரலாற்றுலேயே முதன் முறையாக சீன அதிபர் ஒருவர், ஒரு வெளிநாட்டு தலைவருக்காக அவருடன் இரண்டுநாள் முழுவதும் செலவிட்டது.
அமெரிக்க அதிபருக்கே அந்த மரியாதைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

பலமான ஒருவனால் மட்டுமே இது சாத்தியம்.
#மோடி என்ற
#தேச_பக்தரின் உழைப்பால் மட்டுமே, உலக அரங்கில்... நம் நாட்டிற்கு இந்த மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது!
சுந்தர்ஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக